
சென்னை: ஜிம் மாஸ்டரின் வீடு புகுந்து நகை கொள்ளையில் ஈடுபட்டவர் கைது செய்யப்பட்டார். சென்னை நங்கநல்லூர் 5-வது மெயின் ரோடு பகுதியில் உள்ள அடுக்குமாடி குடியிருப்பில் வசிப்பவர் ஜனார்த்தனன் (42). ஜிம் மாஸ்டரான இவர் சொந்தமாக ஜிம் நடத்தி வந்தார்.
கடந்த 27-ம் தேதி மதியம் வீட்டை பூட்டிவிட்டு குடும்பத்துடன் உறவினர் இறப்பு சடங்குக்கு சென்றுவிட்டு இரவு வீட்டுக்கு வந்து பார்த்தபோது, அவரது வீட்டின் கிரில் கேட் மற்றும் கதவின் பூட்டுகள் உடைக்கப்பட்டிருந்தது. மேலும், வீட்டின் பீரோவில் வைத்திருந்த தலா 8 கிராம் எடை கொண்ட 29 தங்க நாணயங்கள் மற்றும் பணம் ரூ.1 லட்சம் திருடு போயிருந்தது.
from இந்து தமிழ் திசை : News in Tamil, Latest Tamil News India & World, Cinema, Hindu Tamil Thisai Daily Newspaper Online: தமிழால் இணைவோம் https://ift.tt/iKaoPeT
0 Comments