Crime

செல்போன் திருடும் கும்பல், தனது குழுவில் உள்ள உறுப்பினர்களுக்கு மாதச் சம்பளம், தங்கும் இடம், உணவு, பயண செலவு ஆகிய சலுகைகளை வழங்கியுள்ளது தெரியவந்துள்ளது.

உத்தர பிரேதேசத்தில் ரயில்களில் செல்போன் திருட்டு அதிகளவில் நடைபெறுவதாக புகார் வந்தது. இதையடுத்து உ.பி கோரக்பூர் ரயில்வே போலீஸார் ரயில் நிலையங்களில் பொருத்தப்பட்ட 200-க்கும் மேற்பட்ட சிசிடிவி கேமிராக்களின் பதிவை ஆராய்ந்தனர். கோரக்பூர் ரயில் நிலையத்துக்கு தொடர்ச்சியாக வந்த சந்தேக நபர்கள் சிலரை ரயில்வே போலீஸார் பிடித்து விசாரணை நடத்தினர். அவர்கள் செல்போன் திருடும் கும்பல என்பது உறுதியானது. அவர்களிடமிருந்து 44 ஆன்ட்ராய்டு போன்கள், ஒரு துப்பாக்கி, கத்தி ஆகியவற்றை ரயில்வே போலீஸார் பறிமுதல் செய்தனர். இவற்றின் மதிப்பு ரூ.10 லட்சம்.



from இந்து தமிழ் திசை : News in Tamil, Latest Tamil News India & World, Cinema, Hindu Tamil Thisai Daily Newspaper Online: தமிழால் இணைவோம் https://ift.tt/F5amyxP

Post a Comment

0 Comments