Crime

புதுக்கோட்டை: கறம்பக்குடி அருகே உயிரிழந்த நர்சிங் மாணவி பாலியல் வன்கொடுமைக்கு ஆளாக்கப்படவில்லை என மாவட்ட காவல் கண்காணிப்பாளர் வந்திதா பாண்டே தெரிவித்தார். புதுக்கோட்டை மாவட்டம் கறம்பக்குடி அருகே கருக்கா குறிச்சியைச் சேர்ந்தவர் ரமேஷ். இவரது மகள் சவுமியா(20). நர்சிங் கல்லூரி மாணவியான இவர், அதே ஊரில் உள்ள கிணற்றில் இருந்து இருதினங்களுக்கு முன்பாக சடலமாக மீட்கப்பட்டார். தற்கொலை வழக்காக வடகாடு போலீஸார் பதிவு செய்தனர்.

மாணவியின் இறப்பில் சந்தேகம் இருப்பதாகவும், வழக்கை கொலை வழக்காக பதிவு செய்து, நடவடிக்கை எடுக்க வேண்டும் எனவும் கூறி மாணவியின் குடும்பத்தினர் மற்றும் உறவினர்கள் மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் இருந்து உடலை பெற மறுத்து நேற்று முன்தினம் அங்கு சாலை மறியலில் ஈடுபட்டனர். காவல் துறைக்கு ஆளுங்கட்சியினர் அழுத்தம் கொடுத்ததால்தான் போலீஸார் நடவடிக்கை எடுக்க தயங்குவதாக பாஜக மாநிலத் தலைவர் அண்ணாமலை தனது எக்ஸ் தளத்தில் பதிவிட்டு இருந்தார்.



from இந்து தமிழ் திசை : News in Tamil, Latest Tamil News India & World, Cinema, Hindu Tamil Thisai Daily Newspaper Online: தமிழால் இணைவோம் https://ift.tt/5sNJZKC

Post a Comment

0 Comments