Crime

மதுரை: மதுரை புதூர் பகுதியில் தனியார் மருத்துவமனையில் இன்று (டிச.31) காலை தீ விபத்து ஏற்பட்டது. தீ உரிய நேரத்தில் அணைக்கப்பட்டதால் அசம்பாவிதங்கள் தவிர்க்கப்பட்டது. விபத்து காரணமாக அந்தப் பகுதியில் சிறிது நேரம் பரபரப்பு ஏற்பட்டது.

மதுரை புதூரில் உள்ள தனியார் மருத்துவமனை மூன்றாவது மாடியில் திடீரென கரும்புகை வெளியேறுவதை அறிந்த அக்கம் பக்கத்தினர் தீயணைப்பு நிலையத்துக்கு தகவல் தெரிவித்தனர். தல்லாகுளம் தீயணைப்பு துறை அலுவலர் அசோக்குமார் தலைமையில் 10 மேற்பட்ட வீரர்கள் சம்பவ இட த்திற்கு விரைந்து சென்றனர். மூன்றாவது மாடியில் ஏற்பட்ட தீயை அணைத்தனர்.



from இந்து தமிழ் திசை : News in Tamil, Latest Tamil News India & World, Cinema, Hindu Tamil Thisai Daily Newspaper Online: தமிழால் இணைவோம் https://ift.tt/A3rvbGJ

Post a Comment

0 Comments