Crime

திருவள்ளூர்: திருநின்​றவூர் பகுதி​யில் ரூ.50 லட்சம் மதிப்​பிலான 3 யானை தந்தங்களை நேற்று வனத்​துறை​யினர் பறிமுதல் செய்​தனர். இது தொடர்பாக கார் ஓட்டுநர் கைது செய்​யப்​பட்​டுள்​ளார். திரு​வள்​ளூர் மாவட்​டம், திருநின்ற​வூர் பகுதி​யில் சிலர் யானை தந்தங்களை பதுக்கி வைத்து, விற்​பனை​யில் ஈடுட முயன்று வருவதாக நேற்று சென்னை, வனவிலங்கு குற்​றப்​பிரி​வினருக்கு ரகசிய தகவல் கிடைத்​துள்ளது.

இதையடுத்து, சென்னை வன விலங்கு குற்றப்​ பிரி​வினர், யானை தந்தங்கள் கடத்​தல், விற்பனை செய்​பவர்​களைப் பிடிக்க திட்​ட​மிட்​டனர். இதையடுத்து வன விலங்கு குற்​றப்​பிரி​வினர், நேற்று திருநின்ற​வூர் பகுதி​யில் யானை தந்தங்களை பதுக்கி வைத்​திருந்த கும்​பலிடம், அவற்றை வாங்​குவது போல் நடித்து அவர்களை திருநின்ற​வூர்- கோமதிபுரம் பகுதிக்கு காரில் வர வைத்​தனர். அப்போது, வன விலங்கு குற்​றப்​பிரி​வின் ஒரு பகுதி​யினர், திரு​வள்​ளூர் வன சரகர் அருள்​நாதன், வன பாது​காப்​பாளர் முனுசாமி தலைமையிலான வனத் துறையினர் அருகில்கார்​களில் மறைந்து இருந்​தனர்.



from இந்து தமிழ் திசை : News in Tamil, Latest Tamil News India & World, Cinema, Hindu Tamil Thisai Daily Newspaper Online: தமிழால் இணைவோம் https://ift.tt/RAKoQuB

Post a Comment

0 Comments