
சென்னையில் கத்திமுனையில் ரூ.20 லட்சம் வழிப்பறி செய்யப்பட்ட விவகாரத்தில் போலீஸ் எஸ்ஐ மற்றும் வருமானவரித் துறை அதிகாரிகள் உட்பட 4 பேர் அடுத்தடுத்து கைது செய்யப்பட்டுள்ளனர். இதுகுறித்து பரபரப்பு பின்னணி தகவல்கள் வெளியாகி உள்ளது.
இதுகுறித்து போலீஸ் தரப்பில் கூறப்படுவதாவது: திருப்பத்தூர் மாவட்டம் வாணியம்பாடி பகுதியைச் சேர்ந்தவர் தொழிலதிபர் ஜூனைத் அகமது. அப்பகுதி காங்கிரஸ் நிர்வாகியாகவும் உள்ளார். இவர் சி.டி. ஸ்கேன் இயந்திரம் வாங்குவதற்காக, தன்னிடம் பணிபுரியும் சென்னை பழைய வண்ணாரப்பேட்டையைச் சேர்ந்த முகமது கவுஸ் (36) என்பவரிடம் ரூ.20 லட்சத்தை கொடுத்து கடந்த 15- ம் தேதி சென்னைக்கு அனுப்பி உள்ளார்.
from இந்து தமிழ் திசை : News in Tamil, Latest Tamil News India & World, Cinema, Hindu Tamil Thisai Daily Newspaper Online: தமிழால் இணைவோம் https://ift.tt/iOdDeHN
0 Comments