Crime

ஜிஎஸ்டி வரி பாக்கிக்கான அபராதத்தை குறைக்க சரக்கு போக்குவரத்து நிறுவன உரிமையாளரிடம் ரூ.3.50 லட்சம் லஞ்சம் வாங்கியதாக மத்திய ஜிஎஸ்டி துணை ஆணையர் உட்பட 3 பேரை சிபிஐ அதிகாரிகள் கைது செய்தனர்.

மதுரையைச் சேர்ந்த கார்த்திக், அழகர்கோவில் பகுதியில் சரக்குப் போக்குவரத்து நிறுவனம் நடத்தி வருகிறார். ஜிஎஸ்டி வரி பாக்கி செலுத்துவது தொடர்பாக மதுரை பீபி குளத்தில் உள்ள மத்திய ஜிஎஸ்டி அலுவலகத்தை கார்த்திக் அணுகியுள்ளார். அங்கு பணியில் இருந்த துணை ஆணையர் சரவணகுமார்(37) ஜிஎஸ்டி வரி பாக்கிக்கான அபராதம் ரூ.1.50 கோடியில் குறிப்பிட்ட தொகையை குறைக்க ரூ.5 லட்சம் லஞ்சம் கேட்டுள்ளார்.



from இந்து தமிழ் திசை : News in Tamil, Latest Tamil News India & World, Cinema, Hindu Tamil Thisai Daily Newspaper Online: தமிழால் இணைவோம் https://ift.tt/IVTFbAL

Post a Comment

0 Comments