Crime

சென்னை: சென்னையில் முகநூல் மூலம் அறிமுகமான பெண்ணிடம் 8 பவுன் நகையை திருடிய இளைஞரை போலீஸார் கைது செய்தனர்.

சென்னை திருவிக நகரை சேர்ந்தவர் சாரதா (52). இவருக்கு முகநூல் மூலம் சிவா என்ற இளைஞர் அறிமுகமாகி உள்ளார். நாளடைவில் இருவரும், தங்களது செல்போன் எண்ணை பகிர்ந்து, செல்போனில் பேசி பழகி வந்துள்ளனர். இந்நிலையில், கடந்த மாதம் 27-ம் தேதி, சாரதா வீட்டுக்கு, சிவா சென்றுள்ளார். சிறிது நேரம் கழித்து தனது தங்க மோதிரங்கள், செயின், வளையல் உள்ளிட்ட 8 பவுன் நகையை கழற்றி வைத்துவிட்டு, சாரதா குளிக்க சென்றார். அவர் குளித்துவிட்டு வருவதற்குள், சிவா, 8 பவுன் நகையை திருடிக் கொண்டு அங்கிருந்து தப்பி சென்றுள்ளார்.



from இந்து தமிழ் திசை : News in Tamil, Latest Tamil News India & World, Cinema, Hindu Tamil Thisai Daily Newspaper Online: தமிழால் இணைவோம் https://ift.tt/OhiuEcr

Post a Comment

0 Comments