
சென்னை: போதைப் பொருள் வழக்கில் கைதான இரு போலீஸாருக்கும், சர்வதேச போதைப் பொருள் கடத்தல் கும்பலுடன் தொடர்பு உள்ளதா? என்ற கோணத்தில் தனிப்படை போலீஸார் விசாரணை மேற்கொண்டுள்ளனர்.
போதைப் பொருள் ஒழிப்பு பணியில் சென்னை போலீஸார் தீவிரம் காட்டி வருகின்றனர். அதன் தொடர்ச்சியாக அனைத்து காவல் நிலைய ஆய்வாளர்கள் தலைமையிலும் தனிப்படைகள் அமைக்கப்பட்டுள்ளது. இதன் தொடர்ச்சியாக 'மெத்தம்பெட்டமைன்' போதைப் பொருள் விற்ற வழக்கில் ஓய்வு பெற்ற டி.ஜி.பி.யின் மகன் அருண் கடந்த அக்டோபர் மாதம் சென்னை பரங்கிமலை போலீஸாரால் கைது செய்யப்பட்டார்.
from இந்து தமிழ் திசை : News in Tamil, Latest Tamil News India & World, Cinema, Hindu Tamil Thisai Daily Newspaper Online: தமிழால் இணைவோம் https://ift.tt/5yX1AKB
0 Comments