Crime

சென்னை: ரஷ்ய அரசு பெயரில் ரூ.2000 கோடி முதலீடு பெற்றுத் தருவதாக கூறி சென்னை தொழில் அதிபரிடம் ரூ.7.32 கோடி பணம் பெற்று மோசடி செய்த வழக்​கில் வட்டாட்​சியர் உட்பட 9 பேர் கைது செய்​யப்​பட்​டுள்​ளனர்.

இதுகுறித்து போலீஸ் தரப்​பில் கூறப்​படு​வ​தாவது: சென்னை தி.நகரைச் சேர்ந்த பிரபல தொழில் அதிபர் ஒருவர் சென்னை காவல் ஆணையர் அலுவல​கத்​தில் அண்மை​யில் புகார் ஒன்று அளித்​தார். அதில், “சென்னை ஆழ்வார்​பேட்​டை​யில் இந்தோ - ரஷ்யன் அசோசி​யேட் என்ற பெயரில் நிறு​வனத்தை நடத்தி வருபவர் அருண்​ராஜ்(38). இவர் ஈஞ்சம்​பாக்​கத்​தில் உள்ள ஆலிவ் பீச்​சில் வசிக்​கிறார். இவர் இந்தோ-ரஷ்யன் தொழில் கூட்​டமைப்​பின் பிரதி​நிதி என்று கூறி என்னிடம் அறிமுக​மானார்.



from இந்து தமிழ் திசை : News in Tamil, Latest Tamil News India & World, Cinema, Hindu Tamil Thisai Daily Newspaper Online: தமிழால் இணைவோம் https://ift.tt/eZTP34v

Post a Comment

0 Comments