Crime

சென்னை: போலீஸாரால் என்கவுன்ட்டர் செய்யப்பட்ட பிரபல கூலிப்படை தலைவன் சீசிங் ராஜா தொடர்புடைய 14-க்கும் மேற்பட்ட இடங்களில் போலீஸார், வருவாய்த் துறையினர் ஒருங்கிணைந்து நேற்று திடீர் சோதனை நடத்தினர். அப்போது, பல்வேறு முக்கிய ஆவணங்களை பறிமுதல் செய்துள்ளனர்.

இதுகுறித்து போலீஸ் தரப்பில் கூறப்படுவதாவது: ஆந்திர மாநிலம் சித்தூரை பூர்வீகமாக கொண்டவர் சீசிங் ராஜா(51). சென்னை கிழக்கு தாம்பரம், ராமகிருஷ்ண புரம், சுபாஷ் சந்திரபோஸ் தெருவில் மனைவியுடன் வசித்து வந்தார். ஆரம்ப காலத்தில் அடிதடி, மோதல் என சிறு சிறு குற்ற வழக்குகளில் சிக்கினார். பின்னர் பிரபல ரவுடியாக வலம் வந்த படப்பை குணாவுடன் நட்பு ஏற்பட்டது.



from இந்து தமிழ் திசை : News in Tamil, Latest Tamil News India & World, Cinema, Hindu Tamil Thisai Daily Newspaper Online: தமிழால் இணைவோம் https://ift.tt/nqiRzxJ

Post a Comment

0 Comments