
காஞ்சிபுரம்: ஏகனாபுரம் ஊராட்சி துணைத் தலைவர் திவ்யா (35) நேற்று முன்தினம் தற்கொலை செய்து கொண்டார். பரந்தூர் விமான நிலையத்துக்கு எதிராக இவர் 9 முறை தீர்மானம் நிறைவேற்றியவர் என்பது குறிப்பிட்டத்தக்கது.
சென்னையின் 2-வது விமான நிலையம் காஞ்சிபுரம் அருகேஉள்ள பரந்தூரில் அமைகிறது. இதற்காக பரந்தூர் மற்றும் சுற்றியுள்ள 13 கிராமங்களில் இருந்து 5,000 ஏக்கர் நிலங்கள் கையகப்படுத்தப்பட உள்ளன. ஏகனாபுரம் உள்ளிட்ட சில கிராமங்கள் முழுமையாக கையகப்படுத்தப்பட உள்ளன. இதனால் இந்த கிராமத்தை மையமாகக் கொண்டு 2 ஆண்டுகளாக போராட்டம் நடைபெற்று வருகிறது. இந்த போராட்டத்தில் பங்கேற்று வந்தவர் கணபதி.
from இந்து தமிழ் திசை : News in Tamil, Latest Tamil News India & World, Cinema, Hindu Tamil Thisai Daily Newspaper Online: தமிழால் இணைவோம் https://ift.tt/KvY2isR
0 Comments