
சென்னை: மதுபான பார் மீது பெட்ரோல் குண்டு வீசிய இளைஞர் கைது செய்யப்பட்டுள்ளார். சென்னை அரும்பாக்கம் 100 அடி சாலையில் டாஸ்மாக் மதுபான கடை மற்றும் அதையொட்டி பார் உள்ளது. நேற்று முன்தினம் மாலை இளைஞர் ஒருவர் மது அருந்திவிட்டு பாரிலேயே தூங்கி உள்ளார். அவரை எழுப்பி வெளியே போகச் சொன்னபோது அவர் சாப்பிட்ட திண்பண்டங்களுக்கு 240 ரூபாய் பணம் கொடுத்துவிட்டு மீதி பணத்தை வாங்கிக் கொண்டு சென்றவர் மீண்டும் சிறிது நேரத்தல் பாருக்கு வந்துள்ளார்.
20 ரூபாய் பணம் கிழிந்துள்ளது என்றும் அதை மாற்றித் தருமாறும் கேட்டதாக கூறப்படுகிறது. அதற்கு பாரில் இருந்தவர்கள் அந்த 20 ரூபாய் பணம் நாங்கள் கொடுக்கவில்லை என்று கூறியதாகவும், இதன் எதிரொலியாக வாக்குவாதம் ஏற்பட்டதாகவும் தெரிகிறது. அப்போது பாரில் வேலை பார்க்கும் ஊழியர்கள் தகராறு செய்த நபரை வெளியே இழுத்து வந்து அனுப்பி வைத்தனர்.
from இந்து தமிழ் திசை : News in Tamil, Latest Tamil News India & World, Cinema, Hindu Tamil Thisai Daily Newspaper Online: தமிழால் இணைவோம் https://ift.tt/pPhZH78
0 Comments