
தூத்துக்குடி / சென்னை: உடன்குடியில் பள்ளி மாணவிகளிடம் உடற்கல்வி ஆசிரியர் பாலியல் அத்துமீறலில் ஈடுபட்டது தொடர்பாக, அப்பள்ளியின் முதல்வர் மற்றும் செயலாளரை போலீஸார் நேற்று கைது செய்தனர்.
உடன்குடியில் உள்ள ஒரு தனியார் மெட்ரிக். பள்ளியில் உடற்கல்வி ஆசிரியராகப் பணியாற்றி வருபவர் பொன்சிங் (42). இவர், கடந்த மாதம் 22-ம் தேதி மண்டல அளவிலான விளையாட்டுப் போட்டிக்காக பள்ளி மாணவிகள் 5 பேரை தூத்துக்குடிக்கு அழைத்துச் சென்றுள்ளார். அப்போது, அவர்கள் தங்கியிருந்த அறையில் மாணவிகளுக்கு மது வாங்கி கொடுத்து, பாலியல் அத்துமீறலில் ஈடுபட்டதாகப் புகார் எழுந்தது.
from இந்து தமிழ் திசை : News in Tamil, Latest Tamil News India & World, Cinema, Hindu Tamil Thisai Daily Newspaper Online: தமிழால் இணைவோம் https://ift.tt/Pv0hkG1
0 Comments