Crime

சென்னை: சமூக வலைதளங்களில் போலி கணக்கு தொடங்கி இளம்பெண்போல பேசி ஆண்களிடம் பணத்தை பறிக்கும் மோசடி செயல், உலகம் முழுவதும் அதிகமாக நடைபெறுகிறது. இதுபோன்ற இணையவழி மோசடி செய்வதற்காகவே பல நிறுவனங்கள் தொடங்கப்பட்டுள்ளன. அவை ஏஜெண்டுகளுடன் கூட்டு சேர்ந்து வேலை தேடும் பல இளைஞர்களை அடிமைகளாக விலைக்கு வாங்கி, அவர்களைக் கொண்டு இந்த மோசடி வழியில் பணம் சம்பாதிக்க சித்திரவதைக்கு உள்ளாக்குகின்றன.

இப்படியான ஒரு சம்பவத்தில் சிக்கி கம்போடியாவில் இருந்து மீட்கப்பட்டவர்தான் பரமக்குடியைச் சேர்ந்த இளைஞர் நீதிராஜா. இவர் தனது அனுபவத்தை ‘இந்துதமிழ்த்திசை' நாளிதழிடம் பகிர்ந்துள்ளார். டிப்ளமோ இன்ஜினியரிங் படித்துள்ள இவர் வெளிநாட்டில் வேலை தேட முடிவு செய்துள்ளார். இதன்தொடர்ச்சியாக கம்போடியாவில் இருக்கும் தனது நண்பர் மூலம் அந்நாட்டில் ‘டேட்டா என்ட்ரி’ வேலைக்கு ஆள் தேவை என்பதை அறிந்தார். இதையடுத்து அந்த வேலையில் சேர்வதற்காக ரூ.2.5 லட்சம் கடன் வாங்கி கொடுத்து பணியில் சேர்ந்துள்ளார்.



from இந்து தமிழ் திசை : News in Tamil, Latest Tamil News India & World, Cinema, Hindu Tamil Thisai Daily Newspaper Online: தமிழால் இணைவோம் https://ift.tt/vXAoQW0

Post a Comment

0 Comments