
விழுப்புரம்: செஞ்சியில் உள்ள அழகு சாதனங்கள் விற்பனையகத்தில் தீ விபத்து ஏற்பட்ட நிலையில், ரூ.2 கோடி மதிப்பிலான பொருட்கள் மற்றும் ரூ 5 லட்சம் பணம் எரிந்து சாம்பலானதாக தகவல் வெளியாகியுள்ளது.
செஞ்சி பேருந்து நிலையம் அருகில் உள்ள காந்தி பஜாரில் பெண்கள் அழகு சாதன விற்பனையகத்தை நடத்தி வருபவர் லட்சுமணன் (50) இவரது தம்பி பாலாஜி வழக்கம்போல் கடையை 10 மணி அளவில் மூடிவிட்டு வீட்டுக்கு சென்று விட்டனர். 10:30 மணி அளவில் திடீரென கடையின் முன்பக்க பகுதியில் தீ எரிவதைக் கண்டு அருகில் இருந்தவர்கள் தீயணைப்பு துறைக்கு தகவல் தெரிவித்தனர்.
from இந்து தமிழ் திசை : News in Tamil, Latest Tamil News India & World, Cinema, Hindu Tamil Thisai Daily Newspaper Online: தமிழால் இணைவோம் https://ift.tt/qgQYEuT
0 Comments