Crime

திருச்சி: திருச்சி மாநகரில் உள்ள நான்கு பள்ளிகள் மற்றும் ஒரு கல்லூரிக்கு இன்று (நவ.5) அதிகாலை இமெயில் மூலம் வெடிகுண்டு மிரட்டல் விடுக்கப்பட்டது. இதையடுத்து வெடிகுண்டு கண்டுபிடிப்பு மற்றும் செயலிழப்பு நிபுணர்கள் உதவியுடன் போலீஸார், சம்பந்தப்பட்ட கல்லூரி, பள்ளிகளில் சோதனை நடத்தி வருகின்றனர். இதனால் சம்பந்தப்பட்ட கல்லூரி, பள்ளிகளுக்கு விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது.

திருச்சி கருமண்டபம் பகுதியில் உள்ள ஆர்.கே.பி.எஸ் பப்ளிக் பள்ளி, கோட்டை பகுதியில் உள்ள சந்தானம் வித்யாலயா பள்ளி, தென்னூர் பகுதியில் உள்ள மகாத்மா காந்தி நினைவு பள்ளி, அதன் அருகே உள்ள ராஜாஜி வித்யாலயா ஆகிய 4 சிபிஎஸ்இ பள்ளிகள், மெயின் கார்டு கேட் பகுதியில் உள்ள ஹோலி கிராஸ் மகளிர் கல்லூரி ஆகியவற்றுக்கு இன்று அதிகாலை 3 மணி அளவில் இமெயில் மூலம் வெடிகுண்டு மிரட்டல் வந்தது.



from இந்து தமிழ் திசை : News in Tamil, Latest Tamil News India & World, Cinema, Hindu Tamil Thisai Daily Newspaper Online: தமிழால் இணைவோம் https://ift.tt/bYdZHPq

Post a Comment

0 Comments