
பொன்னேரி: ஆந்திராவில் 6 பவுன் நகைக்காக மூதாட்டியை கொலை செய்து, உடலை சூட்கேஸில் ரயிலில் எடுத்து வந்து மீஞ்சூர் ரயில் நிலையத்தில் வைத்துவிட்டு தப்ப முயன்றதாக தந்தை, மகளை ரயில்வே போலீஸார் கைது செய்தனர்.
ஆந்திர மாநிலம், நெல்லூர் பகுதியைச் சேர்ந்தவர் பாலசுப்பிரமணியம் (44). பொற்கொல்லரான இவர் தனது 17 வயது மகளுடன் நேற்று முன்தினம் பிற்பகலில் சென்னை சென்ட்ரல் செல்லும் மின்சார ரயிலில் பயணித்தார். அந்த ரயில், நேற்று முன்தினம் இரவு 7.45 மணியளவில் மீஞ்சூர் ரயில் நிலையத்தில் நின்றபோது, தந்தையும், மகளும் 2 சூட்கேஸ்களுடன் இறங்கினர்.
from இந்து தமிழ் திசை : News in Tamil, Latest Tamil News India & World, Cinema, Hindu Tamil Thisai Daily Newspaper Online: தமிழால் இணைவோம் https://ift.tt/amZvlbx
0 Comments