Crime

சென்னை: சென்னையில் போதைப் பொருள் விற்பனையில் ஈடுபட்டதாக, ‘சுந்தரி’ சீரியல் துணை நடிகை மீனாவை போலீஸார் கைது செய்தனர்.

சென்னை ராயப்பேட்டையில் இளம்பெண் ஒருவர் போதைப் பொருள் விற்பனை செய்வதாக போதைப் பொருள் தடுப்பு நுண்ணறிவுப் பிரிவு போலீஸாருக்கு ரகசிய தகவல் கிடைத்தது. அதன் அடிப்படையில், ராயப்பேட்டை மணிக்கூண்டு அருகே, சாதாரண உடையில் போலீஸார் இன்று காலை கண்காணிப்பு பணியில் ஈடுபட்டிருந்தனர். அப்போது, அங்கு சந்தேகத்துக்கிடமாக நின்று கொண்டிருந்த இளம் பெண்ணின் நடவடிக்கைகளை போலீஸார் கண்காணித்தனர். சிறிது நேரத்தில் அங்கு வந்த இளைஞர் ஒருவர், அந்த பெண்ணிடம் இருந்து பார்சல் ஒன்றை வாங்குவதைப் பார்த்து போலீஸார் விரைந்து சென்று அந்த இளம்பெண்ணை சுற்றிவளைத்து பிடித்தனர்.



from இந்து தமிழ் திசை : News in Tamil, Latest Tamil News India & World, Cinema, Hindu Tamil Thisai Daily Newspaper Online: தமிழால் இணைவோம் https://ift.tt/fq54Pyn

Post a Comment

0 Comments