Crime

சென்னை: சென்னை, திருவண்ணாமலை உட்பட பல்வேறு பகுதிகளில் தொடர் திருட்டில் ஈடுபட்டதாக இருவர் கைது செய்யப்பட்டனர். சென்னை பெரியமேடு, மகதூம் ஷெரீப் தெருவைச் சேர்ந்தவர் முகமது பஹீம் (46). இவர், பெரியமேடு வீராசாமி தெருவில் காலணி உதிரிப் பாகங்கள் விற்பனை செய்யும் கடை நடத்தி வருகிறார்.

இவர் கடந்த 22-ம் தேதி மதியம், தனது இருசக்கர வாகனத்தை தனது கடை முன்பு நிறுத்திவிட்டு கடைக்குச் சென்று, சிறிது நேரம் கழித்து வந்து பார்த்தபோது அது மாயமாகி இருந்தது. அதிர்ச்சி அடைந்த முகமது இதுகுறித்து பெரியமேடு காவல் நிலையத்தில் புகார் அளித்தார்.



from இந்து தமிழ் திசை : News in Tamil, Latest Tamil News India & World, Cinema, Hindu Tamil Thisai Daily Newspaper Online: தமிழால் இணைவோம் https://ift.tt/hBl5tAi

Post a Comment

0 Comments