Crime

மும்பை: பிரதமர் நரேந்திர மோடிக்கு கொலை மிட்டல் விடுத்தது தொடர்பாக 34 வயது பெண் ஒருவரிடம் மும்பை போலீஸார் விசாரணை மேற்கொண்டுள்ளனர்.

மும்பையில் பெண் ஒருவர் நேற்று முன்தினம் காவல்துறை கட்டுப்பாட்டு அறைக்கு செல்போனில் தொடர்புகொண்டு பிரதமர் மோடியை கொலை செய்வதற்கான திட்டமும் ஆயுதமும் தயாராக இருப்பதாக கூறியுள்ளார். மும்பை மேற்கு புறநகர் அம்போலியில் இருந்து இந்த மிரட்டல் வந்ததை அறிந்த போலீஸார் இது தொடர்பாக வழக்குப் பதிவு செய்தனர். பிறகு இந்த வழக்கில் 34 வயது பெண் ஒருவரை பிடித்து போலீஸ் காவலில் வைத்தனர்.



from இந்து தமிழ் திசை : News in Tamil, Latest Tamil News India & World, Cinema, Hindu Tamil Thisai Daily Newspaper Online: தமிழால் இணைவோம் https://ift.tt/EfRKtBJ

Post a Comment

0 Comments