Crime

சென்னை: தடை செய்யப்பட்ட போதைப் பொருள் அடங்கிய பார்சல் வந்திருப்பதாக பெண் டிஐஜியை போனில் மிரட்டி பணம் பறிக்க முயற்சித்த நபரை சைபர் க்ரைம் போலீஸார் தேடி வருகின்றனர். சைபர் க்ரைம் போலீஸ் பேசுவதாக பொதுமக்களை மிரட்டி, அவர்களிடம் பணம் பறிக்கும் மோசடி சம்பவங்கள் நாடு முழுவதும் தினசரி அரங்கேறி வருகின்றவ. இதுதொடர்பாக போலீஸாரும் விழிப்புணர்வு ஏற்படுத்தி வருகின்றனர்.

இந்நிலையில், சென்னையில் பெண் போலீஸ் டிஐஜி-யையும் மிரட்டி பணம் பறிக்க முயன்ற சம்பவம் நடந்துள்ளது. ஆயுதப்படை டிஐஜி விஜயலட் சுமியை கடந்த 19-ம் தேதி செல்போனில் தொடர்பு கொண்ட நபர் ஒருவர், தான் சைபர் க்ரைம் போலீஸ் பேசுவதாகக் கூறியுள்ளார். பின்னர், உங்களது ஆதார் எண்ணை பயன்படுத்தி, தடை செய்யப்பட்ட போதைப் பொருட்கள் அடங்கி பார்சல், அகமதாபாத்தில் இருந்து இலங்கைக்கு சர்வதேச கொரியர் மூலம் அனுப்பட்டிருக்கிறது என கூறிய அந்தநபர், இதுகுறித்து விசாரிக்க வேண்டும் என கூறியுள்ளார்.



from இந்து தமிழ் திசை : News in Tamil, Latest Tamil News India & World, Cinema, Hindu Tamil Thisai Daily Newspaper Online: தமிழால் இணைவோம் https://ift.tt/6uTa9D2

Post a Comment

0 Comments