
சென்னை: யுபிஐ செயலியை பயன்படுத்தி அதிகளவில் பணம் மோசடி நடைபெறுவதாக சைபர் கிரைம் போலீஸார் எச்சரித்துள்ளனர். இதுகுறித்து சைபர் கிரைம் போலீஸார் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது: போன் பே, ஜி பே உள்ளிட்ட யுபிஐ செயலி மூலம் மோசடியான வங்கி பரிவர்த்தனைகள் அதிகளவில் நிகழ்வதாக சமீபத்தில் அதிக புகார்கள் பதிவாகி உள்ளன.
போன் பே வழியாக, பொதுமக்களுக்கே தெரியாமல், அவர்களது வங்கி கணக்கில் இருந்து, அதிகளவிலான பணம் மோசடியாக எடுக்கப்படுவதாக புகார்கள் வந்துள்ளன. இதுதொடர்பாக நடத்தப்பட்ட விசாரணையில், வரப்பெற்ற அனைத்து புகார்களிலும் மோசடி செய்யப்பட்ட தொகைகள் அனைத்தும் அமேசான் பே-க்கு மாற்றப்பட்டிருப்பது தெரியவந்துள்ளது.
from இந்து தமிழ் திசை : News in Tamil, Latest Tamil News India & World, Cinema, Hindu Tamil Thisai Daily Newspaper Online: தமிழால் இணைவோம் https://ift.tt/xHoBY10
0 Comments