Crime

பெங்களூரு: கர்​நாடகா போவி மேம்​பாட்டு ஆணையத்​தில் கடந்த 2021-22-ம் ஆண்டில் போவி உறுப்​பினர்​களுக்கு வேலை​வாய்ப்புத் திட்​டத்​தின் கீழ் கடனுக்காக ஒதுக்​கப்​பட்ட நிதி​யில் ஊழல் நடந்​ததாக புகார் எழுந்​தது. இதுதொடர்பாக சிக்​கபள்​ளாப்​பூர், தொட்​டபள்​ளாபூர், கலபுரகி ஆகிய இடங்களில் வழக்​குகள் பதிவான நிலை​யில், அந்த வழக்​குகள் சிறப்பு புலனாய்வு பிரிவு போலீ​ஸாரிடம் ஒப்படைக்​கப்​பட்டன.

இதுகுறித்து கடந்த 14-ம் தேதி பெங்​களூரு​வில் உள்ள பத்ம​நாபா நகரை சேர்ந்த‌ பெண் தொழில​திபர் ஜீவா (33) என்பவரிடம் போலீ​ஸார் விசாரணை நடத்​தினர். இந்நிலை​யில் கடந்த சனிக்​கிழமை இரவு தனது வீட்​டில் ஜீவா தற்கொலை செய்​து​கொண்​டார். அவர் இறப்​ப​தற்கு முன்பு எழுதி​ய​தாகக் கூறப்​படும் 11 பக்க தற்கொலை கடிதத்​தில், ‘‘கடந்த 14-ம் தேதி முதல் 22-ம் தேதி வரை போலீஸ் விசா​ரணைக்கு ஆஜரானேன். அப்போது சிறப்பு புலனாய்வுபிரி​வின் துணை காவல் கண்காணிப்​பாளர் கனகலட்​சுமி என்னை மனரீ​தி​யாக​வும், உடல் ரீதி​யாக​வும் துன்​புறுத்​தினார்.



from இந்து தமிழ் திசை : News in Tamil, Latest Tamil News India & World, Cinema, Hindu Tamil Thisai Daily Newspaper Online: தமிழால் இணைவோம் https://ift.tt/JNU9eQo

Post a Comment

0 Comments