
பெங்களூரு: கர்நாடகா போவி மேம்பாட்டு ஆணையத்தில் கடந்த 2021-22-ம் ஆண்டில் போவி உறுப்பினர்களுக்கு வேலைவாய்ப்புத் திட்டத்தின் கீழ் கடனுக்காக ஒதுக்கப்பட்ட நிதியில் ஊழல் நடந்ததாக புகார் எழுந்தது. இதுதொடர்பாக சிக்கபள்ளாப்பூர், தொட்டபள்ளாபூர், கலபுரகி ஆகிய இடங்களில் வழக்குகள் பதிவான நிலையில், அந்த வழக்குகள் சிறப்பு புலனாய்வு பிரிவு போலீஸாரிடம் ஒப்படைக்கப்பட்டன.
இதுகுறித்து கடந்த 14-ம் தேதி பெங்களூருவில் உள்ள பத்மநாபா நகரை சேர்ந்த‌ பெண் தொழிலதிபர் ஜீவா (33) என்பவரிடம் போலீஸார் விசாரணை நடத்தினர். இந்நிலையில் கடந்த சனிக்கிழமை இரவு தனது வீட்டில் ஜீவா தற்கொலை செய்துகொண்டார். அவர் இறப்பதற்கு முன்பு எழுதியதாகக் கூறப்படும் 11 பக்க தற்கொலை கடிதத்தில், ‘‘கடந்த 14-ம் தேதி முதல் 22-ம் தேதி வரை போலீஸ் விசாரணைக்கு ஆஜரானேன். அப்போது சிறப்பு புலனாய்வுபிரிவின் துணை காவல் கண்காணிப்பாளர் கனகலட்சுமி என்னை மனரீதியாகவும், உடல் ரீதியாகவும் துன்புறுத்தினார்.
from இந்து தமிழ் திசை : News in Tamil, Latest Tamil News India & World, Cinema, Hindu Tamil Thisai Daily Newspaper Online: தமிழால் இணைவோம் https://ift.tt/JNU9eQo
0 Comments