
சொந்த மகனை, 26 ஆண்டுகளுக்கு முன் கொலை செய்துவிட்டு, தப்பி தலைமறைவான தந்தையை, திருமண பத்திரிக்கை மூலம் ஆந்திர போலீஸார் கைது செய்துள்ளனர்.
ஆந்திர மாநிலம், அனந்தபூர் மாவட்டம், குடிபண்டா மண்டலம், திண்ணஹட்டிகி கிராமத்தை சேர்ந்தவர் திப்பேசாமி. இவர் தனது மனைவி மீது தீவிர சந்தேகம் கொண்டிருந்தார். இவர்களுக்கு 6 மாதத்தில் ஒரு மகன் இருந்தான். இந்நிலையில், கடந்த 1998-ம் ஆண்டு மனைவி மற்றும் மகனுடன் தசரா பூஜையில் பங்கேற்க கோயிலுக்கு சென்றார். அப்போது மனைவி கோயிலை பிரதட்சனம் செய்து கொண்டிருந்தபோது, மனைவி மீது இருந்த சந்தேகத்தால், தனது 6 மாத மகனை தூக்கி சென்று, ஒரு புதரில் கொலை செய்து, அங்கேயே சடலத்தை குழி தோண்டி புதைத்துவிட்டு, திப்பேசாமி தப்பி ஓடி விட்டார்.
from இந்து தமிழ் திசை : News in Tamil, Latest Tamil News India & World, Cinema, Hindu Tamil Thisai Daily Newspaper Online: தமிழால் இணைவோம் https://ift.tt/yn4gdWf
0 Comments