
சென்னை: தீவிரவாத இயக்கத்துக்கு ஆள் சேர்த்தவிவகாரத்தில் மேலும் ஒருவரை என்ஐஏகைது செய்துள்ளது. தற்போது கைதுசெய்யப்பட்டவர் காஷ்மீரை இந்தியாவிலிருந்து பிரிக்க பாகிஸ்தானிடம் உதவி கேட்க ஆலோசித்ததாக பரபரப்பு தகவல்களும் வெளியாகி உள்ளது.
இந்தியா உட்பட பல்வேறு நாடுகளில் தடை செய்யப்பட்ட ஹிஸ்ப்-உத்-தஹ்ரிர் இயக்கத்துக்கு ஆதரவான கருத்துகள் யூ-டியூப் சேனல் ஒன்றில், இருந்ததை சென்னை மத்திய குற்றப்பிரிவில் உள்ள சைபர் க்ரைம்போலீஸார் கண்டறிந்து துப்பு துலக்கினர். இதில், சென்னை ராயப்பேட்டையை சேர்ந்த முன்னாள் கவுரவ பேராசிரியராக பணியாற்றிய ஹமீது உசேன் என்பவர், ‘டாக்டர் ஹமீது உசேன் டாக்ஸ்’ என்ற பெயரில் யூ-டியூப்சேனல் நடத்தி வந்ததும், அதில், தடை செய்யப்பட்ட தீவிரவாத இயக்கத்துக்கு ஆதரவாக பேசி, மூளைச் சலவை செய்து இளைஞர்களை திரட்டி வந்ததும் தெரியவந்தது. ஹமீது உசேன், அவரது சகோதரர் அப்துல் ரகுமான் உட்பட 6 பேரை சைபர் க்ரைம் போலீஸார் கைது செய்தனர்.
from இந்து தமிழ் திசை : News in Tamil, Latest Tamil News India & World, Cinema, Hindu Tamil Thisai Daily Newspaper Online: தமிழால் இணைவோம் https://ift.tt/WeOjL4H
0 Comments