Crime

திருநெல்வேலி: திருநெல்வேலியில் பிரபல தனியார் கண் மருத்துவமனையான அரவிந்த் கண் மருத்துவமனைக்கு வெடிகுண்டு மிரட்டல் விடுவிக்கப்பட்டதால் பரபரப்பு ஏற்பட்டது. இதையடுத்து வெடிகுண்டு நிபுணர்கள் நடத்திய சோதனைக்கு பிறகு அது வெறும் புரளி என தெரியவந்தது. மிரட்டல் விடுத்தது மருத்துவமனையின் முன்னாள் ஊழியர் என்பதும் விசாரணையில் தெரியவந்துள்ளது.

திருநெல்வேலி சந்திப்பு பகுதியில் அரவிந்த தனியார் மருத்துவமனை செயல்பட்டு வருகிறது. இம்மருத்துவமனையில் ஏழை எளிய நடுத்தர மக்களுக்கு இலவசமாகவும், சலுகை விலையிலும் கண் அறுவை சிகிச்சை செய்யப்படுகிறது. இதுபோல் வசதி படைத்தவர்களுக்கும் அவர்களின் வசதிக்கேற்ப நவீன முறையில் அறுவை சிகிச்சை செய்யப்படுவதால் நாள்தோறும் இம்மருத்துவமனைக்கு திருநெல்வேலி மட்டுமின்றி சுற்றுவட்டார மாவட்டங்களில் இருந்தும், கேரளத்திலிருந்தும் ஆயிரக்கணக்கானோர் சிகிச்சைக்கு வருகிறார்கள். இம்மருத்துவமனையின் கிளைகள் மதுரை, கோவையிலும் கிளைகள் உள்ளன.



from இந்து தமிழ் திசை : News in Tamil, Latest Tamil News India & World, Cinema, Hindu Tamil Thisai Daily Newspaper Online: தமிழால் இணைவோம் https://ift.tt/XmIW1ja

Post a Comment

0 Comments