Crime

சென்னை: சென்னை மெரினா கடற்கரையில் ரோந்து போலீஸாரை ஆபாசமாக பேசி திட்டி, மிரட்டல் விடுத்த நபர் தனது பெண் தோழியுடன் கைது செய்யப்பட்டுள்ளார்.

இரவு 10 மணிக்கு மேல் மெரினா கடற்கரையில் பொது மக்களுக்கு அனுமதி இல்லை. மீறி இருப்பவர்களை ரோந்து போலீஸார் அனுப்பி வைத்து விடுவார்கள். அதன்படி, நேற்று (அக்.20) நள்ளிரவு 12.30 மணியளவில் மெரினா உட்புறச் சாலை வழியாக (பட்டினப்பாக்கம் - மெரினா உட்புறச்சாலை) மயிலாப்பூர் காவல் நிலைய போலீஸார் ரோந்து பணியில் ஈடுபட்டிருந்தனர். அப்போது, அந்த சாலையில் காரை நிறுத்தி, ஒரு ஆணும் பெண்ணும் ஜோடியாக நெருக்கமாக நின்று பேசிக் கொண்டிருந்தனர். இதையடுத்து, அங்கு சென்ற ரோந்து போலீஸார், அங்கிருந்து செல்லும்படி அவர்களிடம் அறிவுறுத்தினர்.



from இந்து தமிழ் திசை : News in Tamil, Latest Tamil News India & World, Cinema, Hindu Tamil Thisai Daily Newspaper Online: தமிழால் இணைவோம் https://ift.tt/lTofPDh

Post a Comment

0 Comments