Crime

சென்னை: சென்னையில் இருந்து அந்தமான் புறப்பட இருந்த விமானத்துக்கு வெடிகுண்டு மிரட்டல் வந்ததால் பரபரப்பு ஏற்பட்டது. அந்தமானில் இருந்து சென்னைக்கு நேற்று பகல் 1 மணிக்கு வரும் ஸ்பைஸ் ஜெட் ஏர்லைன்ஸ் பயணிகள் விமானம், மீண்டும் பிற்பகல் 3 மணிக்கு அந்தமானுக்கு புறப்பட்டு செல்ல இருந்தது. அந்த விமானத்தில் அந்தமான் செல்வதற்காக 99 பயணிகள் சென்னை விமான நிலையத்தில் காத்திருந்தனர்.

அப்போது, சென்னையில் உள்ள ஸ்பைஸ் ஜெட் ஏர்லைன்ஸ் விமான நிறுவன ரீஜினல் மேனேஜர் அலுவலகத்துக்கு பிற்பகல் 2.30 மணியளவில் வந்த இ-மெயிலில், அந்தமான், டெல்லி, புனே, கோவா மற்றும் மும்பை ஆகிய இடங்களுக்கு செல்லும் ஸ்பெஸ் ஜெட் விமானங்களில் வெடிகுண்டுகள் வைக்கப் பட்டிருப்பதாகக் குறிப்பிடப்பட்டி ருந்தது. இதுபற்றி உடனடியாக சென்னை விமான நிலைய இயக்குநர் அலுவலகத்துக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது.



from இந்து தமிழ் திசை : News in Tamil, Latest Tamil News India & World, Cinema, Hindu Tamil Thisai Daily Newspaper Online: தமிழால் இணைவோம் https://ift.tt/DLfwFHd

Post a Comment

0 Comments