
செங்குன்றம்: புழல் மத்திய சிறையில் நேர்காணலின் போது கைதிக்கு வீடியோ கால் பேச மொபைல் போன் போன் கொடுத்த பெண் வழக்கறிஞரை போலீஸார் கைது செய்தனர்.
சென்னை புழல் மத்திய சிறையின் விசாரணை பிரிவில் அடிதடி வழக்கில் கைதான ஆனந்தன் என்கிற கல்லறை ஜான் அடைக்கப்பட்டுள்ளார். இந்நிலையில், நேற்று பார்வையாளர் நேரத்தின் போது, விசாரணை கைதி ஆனந்தனை பார்க்க, சென்னை - கே.கே.நகரை சேர்ந்த பெண் வழக்கறிஞர் பிரியதர்ஷினி (26) சிறைக்கு வந்தார்.
அப்போது, கைதி ஆனந்தனை பார்த்ததும், அவரிடம் பிரியதர்ஷினி, வீடியோ காலில் பேச தன் மொபைல் போனை கொடுத்துள்ளார். இதனை கண்காணிப்பு கேமரா காட்சிகள் மூலம் அறிந்த சிறைக் காவலர்கள், கைதி ஆனந்தனுக்கு வழக்கறிஞர் பிரியதர்ஷினி கொடுத்த மொபைல் போனை பறிமுதல் செய்தனர்.
from இந்து தமிழ் திசை : News in Tamil, Latest Tamil News India & World, Cinema, Hindu Tamil Thisai Daily Newspaper Online: தமிழால் இணைவோம் https://ift.tt/q8RMsPJ
0 Comments