Crime

சென்னை: போலி பத்திரப்பதிவு விவகாரம் தொடர்பாக கைது செய்யப்பட்ட பத்திரப்பதிவுத் துறை டிஐஜி ரவீந்திரநாத், சிறையில் அடைக்கப்பட்டார். இந்த விவகாரம் தொடர்பாக பல்வேறு தகவல்கள் வெளியாகி உள்ளன.

இதுகுறித்து போலீஸ் தரப்பில் கூறப்படுவதாவது: சேலம் - மதுரை சரக பத்திரப்பதிவு துறை டிஐஜியாக பணியாற்றி வந்தவர் ரவீந்திரநாத்(56). இவர் சென்னையில் பத்திரப்பதிவு துறை பதிவாளராகப் பணியாற்றிய காலகட்டத்தில், பெருங்களத்தூரில் சுமார் ரூ.50 கோடி மதிப்புள்ள ஒன்றரை ஏக்கர் நிலம் போலிஆவணம் மூலம் பதிவு செய்யப்பட்டது. இதற்கு ரவீந்திரநாத் உடந்தையாக இருந்துள்ளார்.அந்த நிலத்தின் உரிமையாளர் கலைவாணி என்பவரது பெயரில் இருந்த உண்மையான பத்திரத்தை திருடி, அதை நகல் எடுத்து அதன்மூலம் போலியாக பத்திரப்பதிவு செய்ததாகவும், அதற்கு உடந்தையாக ரவீந்திரநாத் இருந்ததாகவும் குற்றம்சாட்டப்பட்டது.



from இந்து தமிழ் திசை : News in Tamil, Latest Tamil News India & World, Cinema, Hindu Tamil Thisai Daily Newspaper Online: தமிழால் இணைவோம் https://ift.tt/Hr5Jwju

Post a Comment

0 Comments