
சென்னை: கோயில்களில் திருடி, விற்பனைக்கு கொண்டு செல்லப்பட்ட 150 ஆண்டுகள் பழமையான 3 ஐம்பொன் சிலைகள் போலீஸாரின் வாகனச் சோதனையில் பறிமுதல் செய்யப்பட்டுள்ளன. இது தொடர்பாக ரவுடி உட்பட 3 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்.
சென்னை டி.பி சத்திரம் காவல் நிலைய போலீஸார் உதவி ஆய்வாளர் சங்கர் தலைமையில் கடந்த 24-ம் தேதி அதே பகுதியில் உள்ள மதினா பள்ளிவாசல் அருகில் வாகனத் தணிக்கையில் ஈடுபட்டிருந்தனர். அப்போது, அந்த வழியாக வந்த இருசக்கர வாகனத்தை மறித்து சோதனை செய்ய முயன்றனர். போலீஸாரை கண்டதும் இருசக்கர வாகனத்தில் வந்தவர்கள் வேறு திசை நோக்கிச் செல்ல முயன்றனர்.
from இந்து தமிழ் திசை : News in Tamil, Latest Tamil News India & World, Cinema, Hindu Tamil Thisai Daily Newspaper Online: தமிழால் இணைவோம் https://ift.tt/fo7gp0N
0 Comments