
விருதுநகர்: விருதுநகரில் மருத்துவக் கல்லூரி மாணவி ஒருவர் நேற்று இரவு தூக்கிட்டுத் தற்கொலை செய்துகொண்டார். இது குறித்து காவல் துறை விசாரணை நடத்தி வருகிறது.
இது குறித்து வெளியான தகவல்: விருதுநகர் லட்சுமி நகரைச் சேர்ந்தவர் வீரமணி. தனியார் பாலிபேக் நிறுவனத்தில் பணியாற்றி வருகிறார். நாம் தமிழர் கட்சியின் தொகுதி செயலாளராகப் பொறுப்பு வகித்து வருகிறார். இவரது மனைவி கனகலதா. விருதுநகர் அரசு மருத்துவக் கல்லூரியில் அலுவலக கண்காணிப்பாளராகப் பணியாற்றி வருகிறார். இவர்களது மகள் ஆதி ஸ்ரீவிவேகா (20). மதுரை அரசு மருத்துவக் கல்லூரியில் முதலாம் ஆண்டு படித்து வந்தார்.
from இந்து தமிழ் திசை : News in Tamil, Latest Tamil News India & World, Cinema, Hindu Tamil Thisai Daily Newspaper Online: தமிழால் இணைவோம் https://ift.tt/1jnawPD
0 Comments