
தாராபுரம்: குண்டடம் அருகே நேற்று (செவ்வாய்க்கிழமை) இரவு 2 இருசச்கர வாகனங்கள் மோதிக்கொண்ட விபத்தில் கட்டிடத் தொழிலாளி உட்பட 2 பேர் பரிதாபமாக இறந்தனர். ஒருவர் காயமடைந்தார்.
திருப்பூர் மாவட்டம்,குண்டடம் அருகேயுள்ள நிறையூரைச் சேர்ந்தவர் பழனிசாமி, இவரது மகன் செல்வக்குமார் (20), கூலித்தொழிலாளி. நேற்று இரவு (செப்.10) செல்வக்குமார் தனது பைக்கில் குண்டடம் அருகே, நிறையூரிலிருந்து தொட்டியன்துறை செல்லும் ரோட்டில் சென்று கொண்டிருந்தார். அதே நேரத்தில் எரகாம்பட்டியில் தங்கியிருந்து கோயில் கட்டிட வேலை செய்து வரும் காரைக்குடி, பள்ளத்தூரைச் சேர்ந்த முருகன் (35) என்பவர் தன்னுடன் வேலை செய்யும் முத்துக்கருப்பன் என்பவரை ஏற்றிக் கொண்டு மொபட்டில் சென்று கொண்டிருந்தார். இரண்டு இருசக்கர வாகனங்களும் கருப்பண்ணன் தோட்டம் அருகே சென்றபோது எதிர்பாராதவிதமாக நேருக்கு நேர் மோதிக்கொண்டன.
from இந்து தமிழ் திசை : News in Tamil, Latest Tamil News India & World, Cinema, Hindu Tamil Thisai Daily Newspaper Online: தமிழால் இணைவோம் https://ift.tt/OJMRcT5
0 Comments