
திருப்பூர்: திருப்பூரை அடுத்த கணியாம்பூண்டி ஸ்ரீசுரபி கார்டனை சேர்ந்தவர் வினோத் குமார் (42). ஃபேன்சி கடை நடத்தி வந்தார். இவருடைய மனைவி புஷ்பா (38). இவர்களது மகள் ஸ்ரீவைஷ்ணவி (16). இவர் தனியார் பள்ளியில் பிளஸ் 2 படித்து வருகிறார். மகன் அஜய் (14) பத்தாம் வகுப்பு படித்து வருகிறார்.
இந்த நிலையில், நேற்று (செப் 10) வினோத்குமாரும், புஷ்பாவும் குழந்தைகளை பள்ளிக்கு அனுப்பிவிட்டு, மங்கலத்தில் உள்ள கோயிலுக்கு சாமி கும்பிட இருசக்கர வாகனத்தில் சென்றனர். அவர்கள் வஞ்சிபாளையம் மேம்பாலம் அருகே சென்றபோது எதிரே வேகமாக வந்த டிப்பர் லாரி வினோத்குமாரின் இருசக்கர வாகனத்தின் மீது மோதியது.
from இந்து தமிழ் திசை : News in Tamil, Latest Tamil News India & World, Cinema, Hindu Tamil Thisai Daily Newspaper Online: தமிழால் இணைவோம் https://ift.tt/UDEWNYm
0 Comments