
திருநெல்வேலி: திருநெல்வேலி மாவட்டம் ராதாபுரம் அருகே 3 வயது குழந்தையை கொலை செய்து, சாக்குமூட்டையில் கட்டி வாஷிங் மெஷினுக்குள் அடைத்து வைத்திருந்த கொடூரம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. இது தொடர்பாக பெண் ஒருவர் கைது செய்யப்பட்டார்.
ராதாபுரம் அருகே உள்ள ஆத்துக்குறிச்சி கிராமத்தில் வசிப்பவர் கட்டிட தொழிலாளி விக்னேஷ் (36). இவரது மனைவி ரம்யா. இவர்களது மூன்று வயது குழந்தை சஞ்சய், அப்பகுதியிலுள்ள அங்கன் வாடியில் படித்து வந்தான்.
from இந்து தமிழ் திசை : News in Tamil, Latest Tamil News India & World, Cinema, Hindu Tamil Thisai Daily Newspaper Online: தமிழால் இணைவோம் https://ift.tt/69DYSvW
0 Comments