
சென்னை: சென்னையில் இருந்து மும்பை புறப்பட்ட விமானத்தின் அவசரகால கதவை பயணி ஒருவர் திறக்க முயன்றதால் பரபரப்பு ஏற்பட்டது. அவர் மீது போலீஸார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
சென்னையில் இருந்து மும்பை செல்லும் இண்டிகோ ஏர்லைன்ஸ் விமானம் நேற்று முன்தினம் (செப்.19) இரவு 11 மணிக்கு 152 பயணிகளுடன் புறப்பட தயாரானது. ஓடுபாதையில் ஓடத் தொடங்கியபோது, திடீரென விமானத்தின் அவசரகால கதவு திறப்பதற்கான எச்சரிக்கை மணி ஒலித்தது. பயணிகள் பீதியடைந்தனர். விமானி உடனடியாக ஓடுபாதையிலேயே விமானத்தை நிறுத்தினார்.
from இந்து தமிழ் திசை : News in Tamil, Latest Tamil News India & World, Cinema, Hindu Tamil Thisai Daily Newspaper Online: தமிழால் இணைவோம் https://ift.tt/CJuv8Vh
0 Comments