Crime

சென்னை: கொல்கத்தா மருத்துவ மாணவி கொலையில் குற்றவாளிகளை தண்டிக்க வேண்டும் என ஜனநாயக தமிழ்நாடு அரசு டாக்டர்கள் சங்கம் வலியுறுத்தி உள்ளது. ஜனநாயக தமிழ்நாடு அரசு டாக்டர்கள் சங்கத்தின் தலைவர் டாக்டர் பி.பாலகிருஷ்ணன், மேற்கு வங்க முதல்வர் மம்தா பானர்ஜிக்கு எழுதியுள்ள கடிதத்தில் கூறியிருப்பதாவது:

கொல்கத்தா ஆர்.ஜி.கர் மருத்துவக் கல்லூரியின் 2-ம் ஆண்டு மருத்துவ மாணவி கொடூரமாக படுகொலை செய்யப்பட்டதை ஜனநாயக தமிழ்நாடு அரசு டாக்டர்கள் சங்கம் வன்மையாக கண்டிக்கிறது. கல்லூரி வளாகத்தில் உள்ள கருத்தரங்கு கூடத்தில் நடைபெற்ற இந்த கொடூர சம்பவத்தில் ஈடுபட்ட குற்றவாளிகளை மேற்கு வங்க அரசு உடனடியாக கைது செய்ய வேண்டும்.



from இந்து தமிழ் திசை : News in Tamil, Latest Tamil News India & World, Cinema, Hindu Tamil Thisai Daily Newspaper Online: தமிழால் இணைவோம் https://ift.tt/tkyfETe

Post a Comment

0 Comments