
குரோம்பேட்டை: மேற்கு மாம்பலம் பகுதியில் குமாரசுவாமி (59) என்பவர் சிறிய மளிகைக் கடை ஒன்றை நடத்தி வருவதுடன் இட்லி மாவு அரைத்து விற்பனையும் செய்து வருகிறார். இந்நிலையில் கடந்த மாதம் 14-ம் தேதி, மதியம் அவரது கடைக்கு வந்த கிஷோர் என்ற நபர் தேங்காய் எண்ணெய் மற்றும் சோப்பு ஆகியவற்றை வாங்கிவிட்டு அதற்கு பாக்கெட்டில் இருந்து பணத்தை எடுத்துக் கொடுக்கும் போது சில்லறைகளுடன் சில வெள்ளி நாணயங்களையும் கொடுத்துள்ளார்.
வெள்ளி நாணயங்களை கண்ட குமாரசுவாமி அதுகுறித்து கேட்டபோது அந்த நபர், தான் கூலி வேலை செய்து வருவதாகவும் வேலை செய்யும் இடத்தில் பள்ளம் தோண்டும்போது தனக்கு வெள்ளி நாணயம், கொஞ்சம் தங்க நகைகள் புதையலாக கிடைத்ததாகவும் தெரிவித்துள்ளார்.
from இந்து தமிழ் திசை : News in Tamil, Latest Tamil News India & World, Cinema, Hindu Tamil Thisai Daily Newspaper Online: தமிழால் இணைவோம் https://ift.tt/3S8zPY0
0 Comments