
நாமக்கல்: ரூ.50 கோடி மதிப்புள்ள நிலத்தை போலி ஆவணம் தயார் செய்து அபகரித்ததாக எழுந்த புகாரில், திருச்செங்கோடு அதிமுக முன்னாள் எம்எல்ஏ-வான பொன்.சரஸ்வதியின் கணவர் மீது நாமக்கல் மாவட்ட குற்றப் பிரிவு போலீசார் வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
நாமக்கல் மாவட்டம் திருச்செங்கோடு ராஜீவ் நகரை சேர்ந்தவர் அதிமுக முன்னாள் எம்எல்ஏ-வான பொன்.சரஸ்வதி. இவரது கணவர் பொன்னுசாமி, ரியல் எஸ்டேட் தொழிலில் ஈடுபட்டு வருகிறார். இவர் நாமக்கல் அடுத்த சிலுவம் பட்டியைச் சேர்ந்த எட்டிக்கண் (72) என்பவருக்கு சொந்தமான 5.62 ஏக்கர் நிலத்தை கடந்த 2006ம் ஆண்டு போலி ஆவணங்கள் தயார் செய்து வாங்கியதாக புகார் எழுந்தது. இந்நிலத்தின் மதிப்பு சுமார் ரூ.50 கோடி என கூறப்படுகிறது.
from இந்து தமிழ் திசை : News in Tamil, Latest Tamil News India & World, Cinema, Hindu Tamil Thisai Daily Newspaper Online: தமிழால் இணைவோம் https://ift.tt/yKE4kcL
0 Comments