Crime

சாத்தூர்: சாத்தூர் அருகே இருக்கன்குடி மாரியம்மன் கோயிலுக்கு பாதயாத்திரை சென்ற பக்தர்கள் 3 பேர் வெள்ளிக்கிழமை (ஆக.2) காலை லாரி மோதி உயிரிழந்தனர்.

சாத்தூர் அருகே உள்ள இருக்கன்குடி மாரியம்மன் திருக்கோயில் மிகவும் பிரசித்திபெற்றது. இக்கோயிலுக்கு ஆடி மாதம் முழுவதும் தமிழகத்தின் பல்வேறு பகுதிகளில் இருந்து ஏராளமான பக்தர்கள் பாத யாத்திரையாக வந்து வழிபடுவது வழக்கம். இந்நிலையில், தென்காசி மாவட்டம் சங்கரன்கோவில் அருகில் உள்ள மேலநீலிந்தநல்லூர் கிராமத்தைச் சேர்ந்த சுமார் 150-க்கும் மேற்பட்ட பக்தர்கள் ஆடிவெள்ளியை முன்னிட்டு இருக்கன்குடி மாரியம்மன் கோயிலுக்கு பாதயாத்திரை வந்தனர்.



from இந்து தமிழ் திசை : News in Tamil, Latest Tamil News India & World, Cinema, Hindu Tamil Thisai Daily Newspaper Online: தமிழால் இணைவோம் https://ift.tt/eSqoBi0

Post a Comment

0 Comments