
சென்னை: சென்னையில் பெண் எஸ்.ஐ. ஒருவர் திடீரென மரணம் அடைந்துள்ள விவகாரம் காவல் துறைவட்டாரத்தில் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது. சென்னை பெரவள்ளூர், ராதாகிருஷ்ணன் நகர், விவேகானந்தர் தெருவைச் சேர்ந்தவர் ஜெயசித்ரா(49). செம்பியம் அனைத்து மகளிர் காவல் நிலையத்தில் சிறப்பு உதவி ஆய்வாளராகப் பணியாற்றி வந்தார். 1997-ம் ஆண்டு தமிழக காவல் துறைபணியில் சேர்ந்த இவர் திருமணம் செய்துகொள்ளாமல் தனியாக வசித்தார்.
திடீர் வாந்தி, மயக்கம்: இவர் நேற்று முன்தினம் தபால் பணி காரணமாக சென்னை மெரினாகடற்கரையில் உள்ள தடய அறிவியல் துறைக்கு சென்றுவிட்டு திரும்பியுள்ளார்.
from இந்து தமிழ் திசை : News in Tamil, Latest Tamil News India & World, Cinema, Hindu Tamil Thisai Daily Newspaper Online: தமிழால் இணைவோம் https://ift.tt/Os4u1T8
0 Comments