Crime

ராமநாதபுரம்: தனுஷ்கோடி கடல் வழியாக இலங்கை தமிழர்களை கள்ளத்தோணியில் மண்டபம் அழைத்து வந்து, அவர்களை கனடா, ஆஸ்திரேலியா நாடுகளுக்கு சட்டவிரோதமாக கள்ளத்தோணியில் அனுப்பி வைக்க இருந்த வழக்கில் 3 ஆண்டுகள் தலைமறைவாக இருந்த மண்டபம் வேதாளையை சேர்ந்தவரை பெங்களூரு தேசிய புலனாய்வு முகமை (என்ஐஏ) அதிகாரிகள் சனிக்கிழமை அன்று கைது செய்து பெங்களூரு அழைத்துச் சென்றனர்.

இலங்கையிலிருந்து கடந்த 2021-ம் ஆண்டு இலங்கை தமிழர்கள், சிங்களர்கள் மற்றும் இஸ்லாம் மதத்தைச் சேர்ந்த 38 நபர்களை சட்டவிரோதமாக கள்ளத்தோணியில் தனுஷ்கோடி கடல் வழியாக மண்டபம் மரைக்காயர்பட்டணம் அருகே உள்ள கடற்கரைக்கு அழைத்து வந்து அவர்களை மண்டபத்தில் தங்க வைத்த பின் சாலை மார்க்கமாக மங்களூரு அழைத்துச் சென்று தங்க வைக்கப்பட்டுள்ளனர்.



from இந்து தமிழ் திசை : News in Tamil, Latest Tamil News India & World, Cinema, Hindu Tamil Thisai Daily Newspaper Online: தமிழால் இணைவோம் https://ift.tt/pFChOSW

Post a Comment

0 Comments