Crime

விழுப்புரம்: விழுப்புரத்தில் இருந்து நெல்லைக்கு 10 கிலோ கஞ்சாவுடன் பயணிக்கவிருந்த இரண்டு இளைஞர்களை விழுப்புரம் போலீஸார் இன்று (சனிக்கிழமை) காலையில் கைது செய்தனர்.

விழுப்புரம் புதிய பேருந்து நிலையத்தில் விழுப்புரம் தாலுகா போலீஸ் இன்ஸ்பெக்டர் ஆறுமுகம் தலைமையிலான போலீஸார் இன்று காலை பாதுகாப்புப் பணியில் ஈடுபட்டிருந்தனர். அப்போது அங்கு சந்தேகத்திற்கிடமாக 2 இளைஞர்கள் சுற்றி வந்தனர். அவர்களை போலீஸார் பிடித்து விசாரணை மேற்கொண்டனர். முன்னுக்குப் பின் முரணாகப் பேசிய அவர்கள் வைத்திருந்த பையை சோதனை செய்தபோது, பையில் 10 கிலோ கஞ்சா இருப்பது தெரியவந்தது.



from இந்து தமிழ் திசை : News in Tamil, Latest Tamil News India & World, Cinema, Hindu Tamil Thisai Daily Newspaper Online: தமிழால் இணைவோம் https://ift.tt/RobOTn6

Post a Comment

0 Comments