
மதுரை: மதுரையில் கைது செய்யப்பட்ட பைக் ரேசர் டிடிஎஃப் வாசன், காவல் துறை உத்தரவுக்கிணங்க தனது செல்போன் உள்ளிட்ட ஆவணங்களை இன்று போலீஸாரிடம் ஒப்படைத்தார்.
சென்னையில் இருந்து மதுரை வழியாக திருச்செந்தூர் சென்ற பைக் ரேசர் டிடிஎஃப் வாசன், வண்டியூர் டோல்கேட் அருகே செல்போன் பேசியபடி அஜாக்கிரதையாக கார் ஒட்டியதாக புகார் எழுந்தது. இது தொடர்பாக மதுரை அண்ணாநகர் காவல்துறையினர் அவர் மீது 8 பிரிவுகளின் கீழ் வழக்குப்பதிவு செய்தனர்.இந்த வழக்கில் கைது செய்யப்பட்ட வாசனை மதுரை நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தியபோது, அவர் மன்னிப்புக் கோரியதால் ஜாமீனில் விடுவிக்கப்பட்டார்.
from இந்து தமிழ் திசை : News in Tamil, Latest Tamil News India & World, Cinema, Hindu Tamil Thisai Daily Newspaper Online: தமிழால் இணைவோம் https://ift.tt/kxWcF32
0 Comments