
சென்னை: திருடிய வீட்டில் செல்போனை தவறவிட்டுச் சென்றவர் கூட்டாளிகள் இருவருடன் கைது செய்யப்பட்டார். சென்னை முகப்பேர் மேற்கு, விஜிபி நகர், பாண்டியன் தெருவில் வசித்து வருபவர் வையாபுரி (68).ராணுவத்தில் அதிகாரியாக பணி யாற்றி ஓய்வு பெற்றவர்.
இவர் கடந்த 31-ம் தேதி தனது வீட்டைப் பூட்டிவிட்டு வெளியே சென்று, மறுநாள் காலை வந்து பார்த்தபோது, வீட்டின் பூட்டு உடைக்கப்பட்டு, பீரோவில் வைத்திருந்த 18 பவுன் தங்க நகைகள் மற்றும் பணம் ரூ.40 ஆயிரம் திருடு போயிருந்தது தெரியவந்தது.
from இந்து தமிழ் திசை : News in Tamil, Latest Tamil News India & World, Cinema, Hindu Tamil Thisai Daily Newspaper Online: தமிழால் இணைவோம் https://ift.tt/Y5RetnL
0 Comments