
கோவை: கன்னியாகுமாி மாவட்டம் நெய்யூரைச் சேர்ந்தவர் பபிஷா ( 18 ). இவர், கோவையில் உள்ள தனியார் செவிலியர் கல்லூரியில் முதலாம் ஆண்டு படித்து வந்தார். கல்லூரி விடுதியில் தங்கியிருந்து வகுப்புக்கு சென்று வந்தார். நேற்று முன்தினம் விடுமுறை என்பதால் மாணவி பபிஷா விடுதி அறையில் தோழிகளுடன் பேசிக் கொண்டிருந்தார்.
அதன் பின்னர், அறையிலிருந்து வெளியே சென்ற பபிஷா, விடுதியின் 3-வது மாடியிலிருந்து திடீரென கீழே குதித்தார். படுகாயமடைந்த அவரை அங்கிருந்தவர்கள் மீட்டு அருகிலுள்ள மருத்துவ மனையில் சேர்த்தனர். அங்கு சிகிச்சை பலனின்றி பபிஷா நேற்று அதிகாலை உயிரிழந்தார். அவரது தற்கொலைக்கான காரணம் குறித்து சரவணம்பட்டி போலீஸார் வழக்குப் பதிந்து விசாரிக்கின்றனர்.
from இந்து தமிழ் திசை : News in Tamil, Latest Tamil News India & World, Cinema, Hindu Tamil Thisai Daily Newspaper Online: தமிழால் இணைவோம் https://ift.tt/z28DN4O
0 Comments