
ஆவடி: சென்னை, கொளத்தூர் - சிவாநந்தா நகரை சேர்ந்தவர் ஹரிபிரசாத். இவர் தனியார் வங்கியின் கிளை மேலாளராக பணிபுரிந்து வருகிறார். கடந்த 2020-ம் ஆண்டு இவருக்கு கொளத்தூரை சேர்ந்த நில தரகரான பிரகாஷ்(40) அறிமுகமாகியுள்ளார். புழல்பகுதியை சேர்ந்த லோகநாதன் (61)-க்கு கள்ளிக்குப்பம் நேதாஜி நகரில் 2,450 சதுரடி மனை உள்ளது என்று கூறி, அவரை ஹரிபிரசாத்துக்குஅறிமுகம் செய்து வைத்துள்ளார்.
போலியாக பத்திர பதிவு: இதைத் தொடர்ந்து, ரூ.31 லட்சம் பெற்றுக் கொண்டு, அந்த மனையில், 1,200 சதுரடியை ஹரிபிரசாத்திடம் லோகநாதன் கிரயம் செய்து கொடுத்துள்ளார். பிறகு ஹரிபிரசாத் தான் வாங்கிய மனையில் வீடு கட்டுவதற்காக, மாநகராட்சியிடம் அனுமதி பெற்றுள்ளார். இந்நிலையில், லோகநாதன் போலி ஆவணம் மூலம் ஹரிபிரசாத்துக்கு பத்திரபதிவு செய்து கொடுத்து ஏமாற்றியது, சார் பதிவாளர் அலுவலகம் மூலம் தெரிய வந்துள்ளது.
from இந்து தமிழ் திசை : News in Tamil, Latest Tamil News India & World, Cinema, Hindu Tamil Thisai Daily Newspaper Online: தமிழால் இணைவோம் https://ift.tt/3grRzPa
0 Comments