Crime

ஸ்ரீவில்லிபுத்தூர்: கல்லூரி மாணவிகளை தவறாக வழி நடத்திய வழக்கில் அருப்புக்கோட்டை பேராசிரியை நிர்மலாதேவிக்கு 10 ஆண்டு சிறை தண்டனையும் ரூ.2.42 லட்சம் அபராதமும் விதித்து ஸ்ரீவில்லிபுத்தூரில் உள்ள மாவட்ட மகளிர் விரைவு நீதிமன்றம் தீர்ப்பளித்தது.

விருதுநகர் மாவட்டம் அருப்புக்கோட்டையை சேர்ந்தவர் பேராசிரியை நிர்மலா தேவி (52). அருப்புக்கோட்டையில் உள்ள அரசு உதவி பெறும் கல்லூரியில் பேராசிரியையாக பணியாற்றி வந்தார். கல்லூரி மாணவிகளை தவறாக வழிநடத்தியதாக இவரைஅருப்புக்கோட்டை நகர் போலீஸார் கடந்த 2018 ஏப்ரல் 16-ம் தேதி கைது செய்தனர். இந்த வழக்கு சிபிசிஐடிக்கு மாற்றப்பட்டு, 5 பிரிவுகளில் வழக்கு பதியப்பட்டது.



from இந்து தமிழ் திசை : News in Tamil, Latest Tamil News India & World, Cinema, Hindu Tamil Thisai Daily Newspaper Online: தமிழால் இணைவோம் https://ift.tt/ou7BAsh

Post a Comment

0 Comments