
சென்னை: சென்னையில் போதைப் பொருள்கடத்துபவர்கள், விற்பனை செய்பவர்களை கைது செய்ய அனைத்து காவல் நிலைய ஆய்வாளர்கள் தலைமையிலும் தனிப்படைகள் அமைக்கப்பட்டுள்ளன.
தனிப்படை போலீஸார் தீவிர கண்காணிப்பு மற்றும் ரோந்து பணிகளில் ஈடுபட்டுள்ளனர். அவர்கள் மூலம் கடந்த 23 முதல் 29-ம் தேதி வரையிலான 7 நாட்கள் நடத்தப்பட்ட தீவிர கண்காணிப்பில் கஞ்சா உட்பட போதைப் பொருட்கள் விற்பனை தொடர்பாக 16 வழக்குகள் பதிவு செய்யப்பட்டு 24 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்.
from இந்து தமிழ் திசை : News in Tamil, Latest Tamil News India & World, Cinema, Hindu Tamil Thisai Daily Newspaper Online: தமிழால் இணைவோம் https://ift.tt/4aI17LV
0 Comments